Wednesday 5 June 2013

சாதிவெறி தலைவிரித்தாடுமா ???

இரயிலில் பயணிக்கும் ஒவொருவரும் நன்றியுடன் நினைத்துப்பார்க்க வேண்டும், நாம் இன்று வேகமாக பயணிக்க காரணம் பா.ம.க வின் மந்திரி போட்டுக்கொடுத்த அகல ரயில்பாதை தான் காரணம் என்று. 108 - ஆம்புலன்சின் சத்தத்தை கேட்கும் பொழுதெல்லாம் நன்றியுடன் நெகிழ வேண்டும், பா.ம.இல்லையே இது கிடைத்திருக்குமா என்று! தர்ம ஆஸ்பத்திரிக்கு செல்லும் ஒவ்வொருவரும் உணர வேண்டும், பா.ம.க இல்லையே இன்று ஊராம அரசு மருத்துவ மனையில் நவீன மருத்துவம் வந்திருக்குமா என்று. தமிழை நேசிக்கும் ஒவ்வொருவரும் உணர வேண்டும், அன்புமணி இல்லை என்றால் நம் பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கு நவீன ஆய்வு மையம் வந்திருக்குமா என்று ? ஒவ்வொரு தலித்தும் சிந்திக்க வேண்டும், அன்புமணி இல்லை என்றால் இன்று மத்திய நுழைவுத்தேர்வில் நாம் பங்கெடுத்து ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான தலித் மாணவர்கள் பயில முடியுமா என்று! 108 மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளும் சொல்ல வேண்டும், ஐயா ஒருவர் இல்லையேல் இன்று நமக்கு கல்வி வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்குமா என்று ! இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் பா.ம.க வின் சாதனைகளை நாங்கள் வந்தால் சாதிவெறி தலைவிரித்தாடுமா ????????

No comments:

Post a Comment