உங்கள் படைப்புகளை இவ்வலைப்பூவில் பகிர

நாம் என்ன தான் முகநூலில் பக்கம் பக்கமாக எழுதினாலும், இணையதளத்தில் தேடும் பொழுது ப்ளாகரில் உள்ள பதிவுகளே முன்னணியில் வரும், இதற்க்கு காரணம் ப்ளாகர் கூகுளின் சொந்த இணைய தொழில்நுட்பம், எனவே நாம் முகநூலை விட ப்ளாகரில் சற்று ஆர்வம் காட்ட வேண்டியது அவசியமாகிறது. நம்மை பற்றிய ஆயிரம் ஆயிரம் விமர்சனங்களை எதிர்கொள்ள நாமும் ஆயிரம் ஆயிரம் கட்டுரைகளை ப்ளாகர் மூலம் எழுத வேண்டியுள்ளது, எனவே நம் சொந்தங்கள் உங்களின் படைப்புகளை நம்முடைய இந்த ப்ளாகரை பயன்படுத்தி பதியுமாறு வலியுறுத்துகிறோம்.

பாட்டாளி மக்கள் கட்சி இணையதள குழுவாகிய இவ்வலைப்பூவில் உங்களுடைய படைப்புகள் ஏதேனும் பகிர விருப்பப்பட்டால், ravananpadayatchi@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் படைப்புகளை மின்னஞ்சல் செய்யலாம், ஒருங்கிணைப்பாளர்களின் ஆய்வுக்கு பிறகு தங்களின் கட்டுரை இவ்வலைப்பூவில் பதியப்படும்.

தங்களின் படைப்புகள் விமர்சனம்,ஆய்வு,அரசியல்,கவிதை,கட்டுரை,வரலாறு ,கலை, அறிவியல் போன்ற உங்கள் படைப்புகள் உங்களின் சொந்த சரக்காக இருக்க வேண்டியது அவசியம். வேறு தளத்தில் இருந்து பிரதி எடுக்கப்பட்ட கட்டுரையாக இருப்பின் கண்டிப்பாக உங்கள் படைப்பு இவ்வலைப்பூவில் பதியப்படாது, மேலும் இவ்வலைப்பூ நிர்வாக குழு உங்கள் பதிவை ஆய்வு செய்து இவ்வலைப்பூவில் பதிந்த பின்னரே உங்கள் படைப்பை நீங்கள் முகநூல் போன்ற வேறு சமூக வலை தளங்களில் பகிரப்பட வேண்டும்.

                                                                                    - பா.ம.க இணைய நிர்வாகக் குழு.

No comments:

Post a Comment