Sunday 28 December 2014

காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் சமூக ஊடகப்பேரவை

                              காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் சமூக ஊடகப்பேரவை

பாட்டாளி மக்கள் கட்சி  பற்றி ஊடகங்கள் கூற மறுக்கும் செய்தியை மக்களுக்கு இணையத்தின் மூலம் எடுத்து கூறும் மாற்று ஊடகமாக மரு.அய்யா அவர்களால் நிறுவப்பட்டு மரு.அன்புமணி ராமதாஸ் அவர்களின் கண்காணிப்பில் உள்ள தமிழ் சமூக ஊடகப்பேரவை அமைப்பின் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டம் 28.12.2014 அன்று காஞ்சிபுரம் நகரில் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது..


கூட்டத்தில் தமிழ் சமூக ஊடகப்பேரவை செயல்பாடுகள் குறித்து அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்
அதில் சில,
*மருத்துவர் அய்யாவின் அறிக்கைகளை தினமும் பகிர்வது
*மரு.அன்புமணி ராமதாஸ் அவர்களின் சாதனைகளை மக்களுக்கு எடுத்து கூறுவது
*FaceBook மட்டுமல்லாமல் Twitter போன்ற சமூக வலைதளத்தை பயன்படுத்துவது
*திராவிட (இதர)கட்சிகளின் மக்கள் விரோத போக்குகளை விமர்சிப்பது
*அந்தந்த பகுதி பாமக கூட்டங்களை முன்கூட்டியே பிறருக்கு தெரிவிப்பது,கூட்டத்தின் நோக்கம் என்ன என்பதை பகிர்வது
*பாமக செய்த சாதனைகளை மக்களுக்கு எடுத்து செல்வது
*இணையத்தில் பெண்களிடம் தமிழ் சமூக ஊடகப்பேரவையை கொண்டுசெல்லவேண்டும் அவர்களுக்கு வன்னியர் வரலாறு மற்றும் பாமகவை கொண்டு செல்வது
*ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 10நபர்களாவது இணையத்தை பயன்படுத்த செய்து செய்திகளை உடனுக்குடன் பகிர்வது
*மாணவர்களிடையே இடஒதுக்கீட்டு போராட்டம் பற்றி எடுத்துக்கூறுவது
*இணையம் பயன்படுத்த தெரியாத பாமகவினருக்கு அதன் பயன்பாடு குறித்து விளக்கும் பயிர்ச்சி பட்டறைகளை நடத்துவது
என, காஞ்சிபுரம் தமிழ் சமூக ஊடப்பேரவை கூட்டம் சிறப்பானதாகவும் பயனுள்ளதாக அமைந்தது


கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் ,சக்தி கமலாம்பாள்,மாநில துணை பொது செயலாளர் Pon Gangatharan Pmk ஆகியோரும்,


தமிழ் சமூக ஊடப்பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் Arul Rathinam மற்றும் Cholan Kumar Vandayar அவர்களும் காஞ்சிபுரம் தசஊபே Nayagan Anbu அவர்களும் கலந்துகொண்டனர்
கூட்டத்தை நடத்த பொருளாதார உதவியை காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் நண்பர் P Magesh Kumar Vanniyanசெய்திருந்தார் ,


கூட்டத்திற்கு இதர மாவட்ட தமிழ்சமூக ஊடப்பேரவை மாவட்ட ஒருங்கினைப்பர்கள் கலந்துகொண்டனர் 
சென்னை தசஊபே ஆலையம்மன் ச.பழனி சத்ரியன்
அரியலூர் அழகாபுரம்.இரா.தங்கதுரை சத்ரியன்
திருவள்ளூர் சண்முக பூபாலன்
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
500க்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் தமிழ் சமூக ஊடப்பேரவை நண்பர்கள் கலந்துகொண்டு இணையத்தில் பாமகவை கொண்டுசெல்ல ஒத்துழைப்பு அளித்தனர்
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் ,நண்பர்களுக்கும் காஞ்சிபுரம் தமிழ் சமூக ஊடப்பேரவை சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறேன்

                                                    கோ.மகேஷ் (Magesh G Kshathriyan)
                                                       தமிழ் சமூக ஊடகப்பேரவை
                                              காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

No comments:

Post a Comment